Wednesday 1 January 2014

தமிழ்த்தாய் வாழ்த்து - ஒரு பார்வை

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார். இது லிட்டன் பிரபுவின்  The secret way என்ற நூலைத் தழுவி, சுந்தரனாரால் இயற்றப்பட்ட 'மனோன்மணியம்' என்னும் கற்பனைப் புதினத்தின் துதிப் பாடல்களுள் ஒன்று.  1970-ஆம் ஆண்டு தமிழக அரசு இப்பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.

இப்பாடலில் ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையி
ல் அமைந்த மற்ற வரிகள் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்தாய் ஏற்கப்பட்டுள்ளன
.

முழுப்பாடல் கீழே:

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!"
 

 நன்றி: விக்கிபீடியா (தமிழ்)

இப்போ பிரிச்சுப் படிக்கலாம்:

நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தைக்கு,

எழில் ஒழுகும் சீர் ஆரும் வதனம் எனத்,

திகழ் பரதக் கண்டம் இதில்,

தெக்கணமும்,

அதில் சிறந்த, திராவிட நல் திருநாடும்,

தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல், அனைத்து உலகும் இன்பம் உற,

எத்திசையும் புகழ் மணக்க, இருந்த பெரும் தமிழ் அணங்கே! தமிழ் அணங்கே!

உன் சீர் இளமைத் திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
விளக்கம்:

நீர் நிறைந்த கடல் என்னும் ஆடை உடுத்திய நில மகளுக்கு, அழகு மிளிரும் பெருமை நிறைந்த முகம் போலத் திகழ்கின்ற பாரதக் கண்டம் இதில், தென் திசை நாடும், அதில் சிறந்து விளங்குகிற திராவிடர்களின் நல்ல திருநாடும் நேர்த்தியான சிறு பிறை நெற்றியில் இட்ட நல்ல குங்குமம் போல விளங்குகிறது. அந்த குங்குமத்தின் வாசனையைப் போல அனைத்து உலகமும் இன்பம் பெறுமாறு எல்லாத் திசைகளிலும் புகழ் பெறுகின்ற பெருமை மிக்கத் தமிழ்ப் பெண்ணே! தமிழ்ப் பெண்ணே!  உன் பெருமை நிறைந்த, இளமையாக இருக்கின்ற திறமை வியந்து, எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!


புதுச்சேரியோட தமிழ்த்தாய் வாழ்த்து இது தானாம்! விக்கி சொல்லுது!

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்

தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

- பாரதிதாசன் (இசை அமுது நூலில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது)

No comments:

Post a Comment