Wednesday 1 January 2014

பாரதி vs பகவதி

என் சித்தப்பா வீட்டுத் தம்பிக்கு ஒரு ப்ராஜெக்ட்டில் உதவி செய்வதற்காக, பாரதி குறித்து படித்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு அழகான விஷயம் பார்க்க நேர்ந்தது. முன்னமே படித்த கட்டுரை தான் அது. ஆனால் இன்று படிக்கும் போது இன்னும் சுவாரஸ்யம் நிறைந்ததாய் இருக்கிறது.

பகவதி படத்தில் வடிவேலு பேச்சு அதிகமாகப் போகும் போது, ஒரு சைகை காட்டி விஜய் 'அடங்கு' என்று சொல்வார்.

து உண்மையில் பாரதியிடம் இருந்து எடுத்தது போல!

புதுவை ஈஸ்வரன் தர்மராஜா கோவில் தெருவில் குடியிருந்தபோது பாரதி நடத்திய ‘தர்பாருக்கு’ தராசுக்கடை என்று பெயர். அவரைக் காணவரும் நண்பர்கள், அன்னியர்கள், உளவாளிகளுடன் பாதி வேடிக்கையும், தீவிரமுமாக நடத்திய உரையாடல்களை அவர் தராசு என்ற பெயரில் பதிவு செய்தார்.

தராசுக்கடைக்கு ஒரு நாள், பாரதிதாசன் வருகிறார். கவிதை குறித்து இருவரும் பேசிக் கொள்வதாய் உரையாடல் தொடரும்.

அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:

***

சேட் சொல்கிறார்: “நான் அதற்கு மாத்திரம் வரவில்லை. வேறு சங்கதி கேட்கவும் வந்தேன். தராசு நடக்கப்போவதை அறிந்து சொல்லுமோ?”

“சொல்லாது’ என்று தராசே சொல்லிற்று.

“சொல்ல சம்மதமிருந்தால் சொல்லும், இல்லையென்றால் சொல்லாது. எதற்கும் நீர் கேட்க வந்த விஷயமென்ன? அதை வெளியிடும்” என்று நான் சொல்லப் போனேன். (இங்கு நான் என்பது பாரதிதாசனைக் குறிக்கும்)

தராசு என்னிடம் “காளிதாசா, ‘அ!’ என்றது. இந்த ‘அ’ காரத்திற்கு அடக்கு என்று அர்த்தம். அதாவது என்னுடைய கருத்துக்கு விரோதமாக வார்த்தை சொல்லாதே என்றர்த்தம். தராசு ‘அ’ என்றவுடன் நான் வருத்தத்துடன் தலை குனிந்து கொண்டேன்.

***

# புதியதெல்லாம் பழையதன் மீள் வடிவம். பழையதெல்லாம் புதுமையின் அடி நாதம்!

No comments:

Post a Comment