Wednesday 1 January 2014

கும்மைகள்


யாரெல்லாம் முகநூலைத் தமிழில் பயன்படுத்துகிறீர்கள்?

ஆம் என்றால் உங்கள் home page-க்குச் செல்லவும். அதில் இடது மூலையில் படித்தவை, நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள், குழுக்கள் இத்யாதி இத்யாதிகள் display ஆகும். அதில் 'பயன்பாடுகள்' என்ற ஒரு குருப்பின் கீழே 'கும்மைகள்' என்று ஒன்று இருக்கும்.

What is கும்மைகள்?

அது பற்றி இப்போ கொஞ்சம் பார்ப்போம்.

பக்கத்தில் dice symbol போட்டிருப்பதிலிருந்து நமக்குத் தெர
ியும் அது Games என்பது!

ஆனால் அது என்ன 'கும்மைகள்', கேள்விப்பட்டதில்லையே என்று கொஞ்சம் தேடியதில் சில தகவல்கள் சிக்கின.

கும்மைகள் என்ற சொல் கும்மாளம் என்பதிலிருந்து வந்ததாய் இருக்கலாம் என்பது தமிழறிஞர்களின் கருத்து. பொதுவாக கும்மை என்பது கும்மி என்பதைக் குறிக்கும். (கும்மியடி கும்மியடி கொடி குலவையும் போட்டு கும்மியடி...)

கும்மை = கொம்மை = கொம்மி = கும்மி

சில இலக்கிய மேற்கோள்கள்:
------------------------------------------------
உடற்ற வரு தீவினை யினைக் கொம்மை கொட்டினன்

- தணிகைப்புராணம்

வள்ளலார் இயற்றிய திருவருட்பாவில் சண்முகக் கொம்மி என்று 14 பாடல்கள் அடங்கிய தனிப்பிரிவே உள்ளது.

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தைப் பாடி யடியுங்கடி.

- இது சண்முகர் கொம்மியின் ஆரம்பப் பாடல்

இந்தப் பாடல் வரிசையில் ஒரு பாட்டு என்னைக் கவர்ந்தது.

ஆனந்தமான அமுதனடி - பர
மானந்த நாட்டுக்கு அரசனடி
தான் அந்தமில்லாச் சதுரனடி - சிவ
சண்முகன் நம் குருசாமியடி.

அதென்ன, அந்தமில்லாச் சதுரனடி?

அந்தம் என்றால் முடிவு. முடிவில்லாத சதுரனடி.

இது எனக்குக் கொஞ்சம் புதுமையாகப் பட்டது. எப்பவும் முடிவில்லாத என்று சொல்வதற்கு வட்டத்தைத் தான் உதாரணம் சொல்வார்கள். எங்கு தொடங்கியது எங்கு முடிகிறது என்று சொல்ல முடியாததாலும் கூட. இங்கு ஏன் சதுரத்தைச் சொல்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் வந்தது. (உதாரணம்: வாழ்க்கை ஒரு வட்டம்டா! இதுல ஜெயிக்குறவன் தோப்பான்..தோக்குறவன் ஜெயிப்பான்..ஹி ஹீ)

அங்கு தான் இருக்கிறது இயற்றியவரின் அறிவுச் செறிவு.

அந்தமில்லாச் சதுரனடி என்பதன் உள்ளர்த்தம் முடிவு இல்லாத நால்வகை முறைகளான சாம, தான, பேத, தண்டம் ஆகியவற்றை நன்கு அறிந்தவன் என்பது.

அதென்ன சாம, தான, பேத, தண்டம்?? (சாம தான பேத தண்ட நாலும் சேர்த்துத் தோத்துப் போகும் தகிடதத்தோம்...தகிடதத்தோம்...அதே தான்..)

இது சாணக்கியன் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள்:

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்

தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்

பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்

தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைக்க, தண்டனை கொடுக்க, யுத்தம் செய்தல்

அவ்ளோ தான்!

No comments:

Post a Comment