Thursday 28 June 2012

முகம் காட்டு



தாலாட்டுப் பாடிக் கேட்டதில்லை
தாய்ப்பால் ருசி கண்டதில்லை
அப்பாவுக்கு அரவணைக்க நேரமில்லை
அவர் அன்னைக்கு உடல்நலம் போதவில்லை
சொத்துக்கள் அதிகம் இருக்கவில்லை
சொந்தபந்தங்களுக்கு உறவு தெரிவதில்லை
சிரிக்க அவசியம் வருவதில்லை
சிந்தவும் கண்ணீர் மிச்சமில்லை
அம்மா என்று யாருமில்லை
அதனால் தானே இந்தநிலை?
அந்தக் கவலை உனக்கில்லை
அன்னை இருக்காள் துயரில்லை
ஒருமுறை காட்டு உன் முகத்தை
ஒத்த குழந்தைப்பருவ சந்தோசத்தை
உனைப் பார்த்தாவது தெரிந்து கொள்கிறேன்!!

No comments:

Post a Comment