Saturday 9 June 2012

ஏமாற்றம்



இருபது நாள்கள் ஆகிவிட்டது இன்றுடன்  
இருவர் விழிகளும் நலம் பேசி;
இருந்தும் வரவில்லை வாய்திறந்து வார்த்தையொன்று;
கண்கள்மட்டும் கவிபேச கடையோரம் நின்றிருந்தேன் ;
கன்னல் மொழி  வார்த்தை யொன்றை 
கன்னியவள் உதிர்த்து வைத்தாள்;
என்னவென்று கேட்டுவர எதிர்நோக்கி சென்றிருந்தேன்;
எள்வெடித்த தோற்றம் என்னவள் மலர்முகத்தில்
எட்டவே நின்று கொண்டேன் சட்டென நெருங்காமல்;
அரும்பு முகம் மலர்ந்து விட்டது ஐந்தே நொடிப்பொழுதில்;
அப்படியே அவள் அருகில் அன்புடன் நான்நின்று கொண்டேன்;
அவள் மொழிந்தாள் அழகுத் தமிழில் 
'எங்கடா  போய்ட்ட திடீர்னு 
எப்படி டென்ஷன் ஆயிட்டேன் தெரியுமா?'
என்னென்னமோ வண்ணக் கனவுகள் கண்ட அந்த வேளையிலே 
மறுபடியும் அவள் அழைத்தாள்
'ஹலோ..கேக்குதா?இங்க சரியா டவர் கிடைக்கல!!'
அடக் கடவுளே!!எவன் டா கண்டுபிடிச்சது இந்த ஹெட்செட்ட??

No comments:

Post a Comment