Saturday 7 July 2012

நான் யார்?


அன்னையிடம் இருந்து பார்த்தேன் 
என்னை அன்பென்றார்கள்;
ஏடுகளில் புகுந்து பார்த்தேன் 
என்னை அறிவென்றார்கள்;
ஆசைகளின்பின் அலைந்து பார்த்தேன்
என்னை அரக்கனன்றார்கள்; 
அடுத்தவனுக்காக அடிவாங்கிப் பார்த்தேன்
என்னைத் தியாகமென்றார்கள்;
கோவிலுக்குள் குடி புகுந்து பார்த்தேன்
என்னைக் கடவுளென்றார்கள்; 
யாருக்கும் இன்னும் தெரியவில்லை
நான் 'எண்ணம்' என்று...

No comments:

Post a Comment