Showing posts with label பொன்மொழி. Show all posts
Showing posts with label பொன்மொழி. Show all posts

Wednesday, 1 January 2014

சிந்தனை கார்னர் - மாலன்

அறிந்த ஒன்றிலிருந்து அறியாத ஒன்றிற்கு இட்டுச் செல்வது அல்லது அறியாத ஒன்றை அறிமுகப்படுத்துவதுதான் இலக்கியத்தின் வேலை

 - மாலன்

சிந்தனை கார்னர் - திருமூலர்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பன்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே!

- திருமூலர் திருமந்திரம் - பாடல் 2290

சிந்தனை கார்னர் - டி.எஸ்.எலியட்

நாம் மனிதர்களின் இயல்பை அறிய முடிவதில்லை. அவர்கள் குறித்து நம் உள்ளத்தில் உள்ள பிம்பங்களையே நெக்குருக நேசிக்கிறோம்

-  டி.எஸ்.எலியட்

இராஜியானந்தா பொன்மொழிகள் - சுதந்திரம்

நாய்களின் சுதந்திரம் அது கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் நீளத்தைப் பொறுத்தது.

சொன்னவர்: இராஜியானந்த சுவாமிகள்

இராஜியானந்தா பொன்மொழிகள் - கற்பனை

தனக்குள்ளே இருக்கும் வரை தான் அது கற்பனை. வெளியில் சொல்லி விட்டால் அதன் பெயர் பொய் என்று மாறிவிடும்.

கற்பனைகளுக்கு மரியாதை உண்டு நம் மனதிற்குள்ளாவது. பொய்களுக்கு அது கிடைப்பதில்லை.

சொன்னவர்: இராஜியானந்த சுவாமிகள்

இராஜியானந்தா பொன்மொழிகள் - நம்பிக்கை

ஒருவர் மீது வைக்கப்படும் முதல் நம்பிக்கை, அவர் செயல்களைப் பொருத்ததல்ல. நம் மனத்தைப் பொருத்தது.

ஒருவர் மீது வைக்கப்படும் கடைசி நம்பிக்கை, நம் மனத்தைப் பொருத்தது அல்ல. அவர் செயல்களைப் பொருத்தது.

தத்துவ முத்தை தூ தூ என்று துப்பியவர்: சுவாமி பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ இராஜியானந்தா!

சிந்தனை கார்னர் - கன்ஃபூசியஸ்

நல்லாட்சி நடக்கும் நாட்டில், ஏழ்மை வெட்கப்பட வேண்டிய ஒன்று;
மோசமான ஆட்சி நடக்கும் நாட்டில், செல்வம் வெட்கப்பட வேண்டிய ஒன்று.

- கன்ஃபூசியஸ்

சிந்தனை கார்னர் - போப் பிரான்சிஸ்

காணாமல் போன ஆடுகளைத் தேடுங்கள். மேய்ப்பன் ஆடுகளின் மணத்துடன் வாழ வேண்டும். அதனால் எளிமையாய் வாழுங்கள். தேவாலயம் சேரிகளுக்குச் செல்லட்டும்.

- போப் பிரான்சிஸ்